Tuesday, 13 September 2011

23. பெண்களே! யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?

பெண்களே!  யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?



உஹது போருக்கு பின் :

தீனார் குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள்
வழியில் சந்தித்தார்கள் .

அந்த பெண்ணின் தந்தையும், கணவரும், சகோதரும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் மரண செய்திய முஸ்லிம்கள் அவருக்கு கூறினார்கள்.

ஆனால் அப்பெண்மணி, அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள் ?
என்று கேட்டார்.

முஸ்லிம்கள், இன்னாரின் தாயே! நீர் விரும்பியதை போன்று, நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள் . எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
என்று கூறினார்கள்.

அதற்கு, அந்த பெண் எனக்கு அவர்களை காட்டுங்கள். நான் அவர்களை
பார்க்க வேண்டும் என்றார். நபியவர்களை கண் குளிர பார்த்த பிறகு,
உங்களை பார்த்த பின்னால் எல்லா துன்பங்களும்,
எங்களுக்கு இலகுவானதே! என்று அப்பெண்மணி கூறினார் .

Source : அர்ரஹீக் அல் மக்தூம், பக்கம் 290

வெளியீடு : தாருல் ஹூதா



33:6இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட 
மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் 
அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். - அல் குர்ஆன்




33:56இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். 
மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். 
முஃமின்களே நீங்களும் அவர் மீதுஸலவாத்து சொல்லி 
அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.- அல் குர்ஆன்





பதிவு : வஸிமா பின்த் ஹசன்








No comments:

Post a Comment